மக்களே, நான் இந்த blog ஆரம்பிச்சப்போ வாரம் ஒரு தடவையாவது எழுதனும் என்று நினைத்தேன். But, இது வரைக்கும் மொத்தமாவே ஒரு தடவைதான் எழுதியிருக்கேன். இதுக்கு காரணம் “தமிழ்ல type பண்றதுதான்” அப்டின்னு நான் சொன்னா நீங்க என்ன நம்பவா போறீங்க? தமிழ்ல type பண்றது நிஜமாவே ரொம்ப கஷ்டங்க. But, அதையெல்லாம் விட “Basically நான் ஒரு சோம்பேறி” அப்டிங்கறது தான் உண்மை.

காலேஜ் படிக்கறப்போ சில பேர் (esp. நம்ம குண்டு கோபால்) எல்லா வேலையும் ஒழுங்கா செய்வாங்க, ஆனா குளிக்க மட்டும் மாட்டாங்க. வாரம் ஒரு தடவை, இல்லைன்னா 10 நாளைக்கு ஒரு தடவைதான் குளிப்பாங்க. கேட்டா, “அது வேற ஒரு extra வேலை மச்சான்”னு சொல்லுவாங்க. இன்னும் சில பேர் 9 மணி காலேஜுக்கு, எட்டே முக்காலுக்கு தான் எழுந்திருப்பாங்க. ஆனா குளிச்சு, சாப்பிட்டு நமக்கு முன்னாடி கிளாஸ்ல உட்காந்திருப்பாங்க. நான் என்ன சொல்ல வர்ரேன்னா, ஊர்ல இருக்கிற எல்லாரும் எதாவது ஒரு விஷயத்துல சோம்பேறிதாங்க.

“Often the smartest people are the laziest ones” – சோம்பேறிங்கதான் புத்திசாலிங்கன்னு சொல்றாங்க. ஒரு புத்திசாலி சோம்பேறியாவே இருக்கனும்னு நினைச்சுட்டா அவன் உலகத்துக்கு எதாவது தரப்போறான்னு அர்த்தம். மிக்ஸி, கிரைண்டர்ல ஆரம்பிச்சு கார், கம்ப்யுட்டர் வரைக்கும் எல்லாத்துக்கு பின்னாடியும் ஒரு சோம்பேறி இருக்கிறாங்க. சோம்பேறிதனத்த இந்த angleல பார்த்தா அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.

எல்லாத்திலேயும் ஒரு அளவோட இருந்தா பிரச்சனையே இல்லை. ஆனா சில பேர் வரம்பு மீறி போவாங்க. அவங்களையெல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. சோம்பேறிதனத்த காலி பண்றதுக்கு ஒரு நல்ல வழி : ஒரு விஷயத்த செய்யனும்னா செஞ்சிருங்க. “செய்யனுமா” அப்டின்னு ஒரு ‘?’ போட்டா சோலி முடிஞ்சி போச்சு. படிக்கனும்னா படிச்சிருங்க, எழுதனும்னா எழுதிருங்க. Take Action – இது தான் சோம்பேறிதனத்த விரட்டுறதுக்கு ஒரே வழி.

“இத நீங்க செய்றது” அப்டின்னு யாரோ கேக்கறது என் காதுல விழுது. நானே யாரோ என்கிட்ட சொன்னத உங்ககிட ஒட்டிக்கிடு இருக்கேன். வந்தோமா, படிச்சோமா அப்டியே நாலு பேருக்கு இத advice பண்ணோமான்னு போவிங்களா, அத விட்டிட்டு கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு……..

நான் அப்பவே சொல்லல, “ஊர்ல இருக்கிற எல்லாரும் எதாவது ஒரு விஷயத்துல சோம்பேறிதாங்கதான்”னு.. கீழ இருக்கற படம் அதுக்கு ஒரு sample..

No related posts.