சின்ன வயதில் என் தாத்தாவிடம் ராமாயணம், மகாபாரதம் போன்ற பல கதைகள் கேட்டிருக்கிறேன். குறிப்பாக கிருஷ்ணர் கதைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை மட்டும் அடிக்கடி கேட்பேன். அதன் பிறகு பள்ளி – விவேகானந்தா வித்யாலயா. கடவுள் பத்தி ரொம்ப பேசுவாங்க. எனக்கு இந்தியா மேலும், கடவுள் மேலும் ஒரு ஈர்ப்பு வர அந்த பள்ளிதான் காரணம்.

அப்ப எல்லாம் கடவுள் எனக்கு ஒரு நெருங்கிய நண்பன். என்ன தப்பு செஞ்சாலும் ஒரு சாரி சொன்னா போதும். அவன் என்னிடம் மட்டும் கோவிக்க மாட்டான். அதனாலோ என்னவோ நான் நிறைய தப்பு செஞ்சிருக்கேன். பொய் சொல்றது, திருடுறது, ஸ்கூலுக்கு கட் அடிக்கறது etc etc… நிறைய சொல்லலாம். எல்லாரும் செய்றதுதான். நீங்க மட்டும் யோக்கிய்மா? கொஞ்சம் flashbackஅ யோசிச்சு பாருங்க. சரி matterக்கு வர்றேன்… எங்க விட்டேன்..ஆங்..கடவுள். நான் என்ன தப்பு செஞ்சாலும் கடவுள் எனக்கு ஒரு Partner. எதிலேயும் பங்கு கேட்காத Partner. என்னமோ தெரியல, நான் அவர்கிட்ட மட்டும் அவ்வளவா பயந்தது இல்ல. இப்படி கடவுளுக்கும், எனக்கும் ஒரு நல்ல relationship இருந்தப்போ நான் சின்னதா ஸ்கூல் படித்து முடித்து விட்டேன்.

question_exclamation

அடுத்தது காலேஜ். ஹாஸ்டல் வாழ்க்கை. வீட்டை விட்டு முதன் முதலா வெளிய போனேன். புது இடம். புது நண்பர்கள். சொந்தமா யோசிக்க ஆரம்பிச்ச வயசு. கடவுள கிட்டத்தட்ட மறந்தே போனேன். ஒரு செமஸ்டரே முடிஞ்சு போச்சு. ரிசல்ட்டுக்காக வெய்ட்டிங். எத்தனை பேப்பர்ல போகும்னே தெரியல. கடவுள்கிட்ட எப்படியாவது பேப்பர் எல்லாம் கிளியர் பண்ண வச்சுடுப்பான்னு ஒரு அப்ளிகேசன் போடலாமான்னு ஒரு யோசனை…. ஆனா நான்தான் அப்ப யோசிக்க ஆரம்பிசுட்டேனே. அப்புறம் எங்க கடவுள். மூனு பேப்பர்ல அவுட். அது எனக்கு ஒன்னும் பெருசா தோணலை(படிக்கறது என் அம்மாவா இருந்தா, I’m sorry…. அது ரொம்ப பழைய கதை…முடிஞ்சு போச்சு. feel பண்ணி எனக்கு phone பண்ணாதீங்க ;) ) அப்ப கடவுள் உண்டா இல்லையான்னு எனக்கு ஒரே confusion! உண்டுன்னு ஒத்துக்கவும் முடியல. இல்லைன்னு ஒதுக்கவும் முடியல. கடவுள் சின்ன வயசுல இருந்து என் மனசுல ஆழமா பதிஞ்சுட்டார். ஸ்௬ல்ல எப்பவோ படிச்ச வாக்கியம் – “பசுமரத்து ஆணிபோல”… அந்த மாதிரி என் மனசுல ஆழமா பதிஞ்சுட்ட கடவுள என்னால ஒத்துக்கவும் முடியல, ஒதுக்கவும் முடியல. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தேன். கடவுள் இருக்கார். ஆனா அவர் கிட்ட எதுவும் கேட்க ௬டாது. அவர்கிட்ட கேட்கறதும், குறை சொல்லறதும் எனக்கு பிச்சை கேட்கற மாதிரி இருந்தது. “ஏற்பது இகழ்ச்சி!” – நினைவுக்கு வந்தது. கடவுளுக்கும் எனக்கும் இடைவெளி ௬டியது. கடவுளின் பெயரால் மதமாற்றம், வன்முறை, தீவிரவாதம்….. காண சகிக்கவில்லை. அத்தனைக்கும் காரணம் கடவுள் இல்லை. ஆனால் கடவுள் என்ற ஒருவர் இருப்பதினால் தானே என்று எண்ணிய மறுகணம், கடவுள் என் கண்களில் இருந்து மறைந்து போனார். கல்லூரி முடிந்து விட்டது. இரண்டு வருடங்கள் ஓடி விட்டன……

சில மாதங்களுக்கு முன்… திடீர் என்று ஒரு திடுக்கிடும் கனவு. என் அம்மாவுக்கு ஏதோ அசம்பாவிதம் நடப்பது போல…. நான் பொதுவாக கனவுகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் என் அம்மா என்பதாலோ என்னவோ, தூக்கம் கலைந்தது. துக்கம் பிறந்தது. என்னை அறியாமல் என் மனம் கடவுளை அழைத்தது! சிரித்தான் அவன். அழுதேன் நான். என்னை மறந்து யாசிக்கிறேன். “ஏற்பது இகழ்ச்சி!” – இகழ்ந்தவன் ஆனதால் நான் வருந்தவில்லை. இகழ்ந்தவன் ஆன பின்பே கலைந்த தூக்கம் மறுபடி வந்தது. காலை எழுந்தேன். இரவு புத்தி ௨றங்கிக் கொண்டிருந்தது போலும். காலை என்னுடன் அதுவும் ௨றக்கம் கலைத்தது. இரவு நடந்த நிகழ்ச்சி புத்திக்கு எட்டியது. என் அம்மாவுக்கு phone செய்தேன். யாவரும் நலம் என அறிந்தேன். மனம் அமைதியானது. புத்தி கேள்வி கேட்டது – “இரவு இகழ்ந்தவன் ஆனதால் தான் இன்று அமைதியாக இருக்கிறாயா?” ஆம் என்றது மனம். இல்லை என்றது புத்தி.

புத்தியா? மனமா?
கடவுள் உண்டா? இல்லையா?
இன்று வரை பதில் தெரியாமல் நான்.

No related posts.